தமிழக செய்திகள்

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றி

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.

தினத்தந்தி

தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் சார்பில் 17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான 13-வது மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தின் விளையாட்டு மைதானத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று மதியம் இறுதி போட்டி நடந்தது. இந்த போட்டியில் பெரம்பலூர் அணியும், சென்னை அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெரம்பலூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 17-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 152 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெரம்பலூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் முதலிடம் பிடித்த சென்னை அணிக்கு தனலட்சுமி அம்மையார் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ.25 ஆயிரம் பரிசு தொகையை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் வழங்கினார். 2-ம் இடத்தை பிடித்த பெரம்பலூர் அணிக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தொகையை ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி.யும், இந்திய பள்ளிகள் கிரிக்கெட் கூட்டமைப்பின் தலைவருமான சொக்கலிங்கம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கத்தின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான சுனில்குமார், அச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு