தமிழக செய்திகள்

துபாய் போன்று பிரமாண்ட நகரமாக சென்னையை உருவாக்குவோம் - முதலமைச்சர் பழனிசாமி

துபாய் போன்று பிரமாண்ட நகரமாக சென்னையை உருவாக்குவோம் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

சென்னை,

விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- தமிழகத்தில் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தும் நீரை, இஸ்ரேல் நாட்டில் 7 ஏக்கருக்கு பயன்படுத்துகிறார்கள். இதனால்தான் நீர் மேலாண்மை குறித்து ஆராய்வதற்காக இஸ்ரேல் செல்ல இருக்கிறேன்.

வெளிநாட்டு பயணத்தின் மூலம் 36 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்தும் அரசு அதிமுக அரசு துபாய் போன்று பிரமாண்ட நகரமாக சென்னையை உருவாக்குவோம். ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதின் மர்மம் என்ன?

வெளிநாடுகளில் இருந்து முதலீடு கொண்டுவந்தால் நான் பாராட்டுவேன் என மு.க.ஸ்டாலின் சொல்கிறார் . நீங்கள் பாராட்டவேண்டிய அவசியமில்லை ; மக்கள் பாராட்டினால் போதும்" இவ்வாறு அவர் பேசினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்