தமிழக செய்திகள்

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி

இந்த போட்டியில் 9 மாநிலங்களில் இருந்து 29 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அகில இந்திய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டிய மாநிலம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி என மொத்தம் 9 மாநிலங்களில் இருந்து 29 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

இதில் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று கர்நாடகம் மற்றும் மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இருவரும் புள்ளிகளின் அடிப்படையில் சமநிலையில் உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வருகின்ற பாரா ஏசியன் போட்டிகளில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்