சென்னை,
கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச்செல்வி மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில், நாகை மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் அவர்களின் மனைவி திருமதி.கலைச்செல்வி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையுற்றேன். துணைவியாரை இழந்துவாடும் மாண்புமிகு அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.