தமிழக செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கம்: பெண் எடுத்த விபரீத முடிவு... போலீசாருக்கு தெரியாமல் கணவர் செய்த காரியம்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை குன்றத்தூரை அடுத்துள்ள ஒத்தவாடை பகுதியைச் சேர்ந்தவர் பரமானந்தம் (வயது 42). இவரது மனைவி ரேவதி (வயது 39). இவர்களுக்கு திருமணமாகி இதுவரை குழந்தை இல்லாததால் மனமுடைந்து காணப்பட்ட ரேவதி, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெளியே சென்றிருந்த அவரது கணவர் வீடுதிரும்பியபோது, ரேவதி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மனைவியின் இறுதிச் சடங்கை செய்வதற்கான பணிகளைச் செய்து வந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தை அடுத்து, சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள் தற்கொலை செய்து கொண்ட ரேவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் ரேவதி திருமணம் ஆகி குழந்தை இல்லாமல் இருந்து வந்ததாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ரேவதி தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்