தமிழக செய்திகள்

நிலுவை கோரிக்கைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் - வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தல்

தமிழக அரசு நிலுவை கோரிக்கைகளை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தினத்தந்தி

சிவகங்கை,

வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் முருகையன், நிலுவை கோரிக்கைகளை தமிழக அரசு ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

"தமிழக அரசு சமீபத்தில் 110 வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு அளித்ததையும், அதைத் தொடர்ந்து அடுத்த 3 ஆண்டுகளில் 117 வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதாக வருவாய்த்துறை அமைச்சரும், துறையின் செயலாளரும் வாக்குறுதி அளித்ததையும் ஏற்று, நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வழங்க மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.

அவ்வாறு இம்மாத இறுதிக்குள் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று முருகையன் தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை