கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 8-ம் தேதி முதல் தொடங்கும் - அண்ணா பல்கலைக்கழகம்

முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் வரும் 8-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கல்வி நிறுவனங்கள், தற்போது தொற்று பரவல் குறைய தொடங்கி உள்ள நிலையில் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் வரும் 8-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், B.E., B.Tech., B.Arch., M.Arch. முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் 8-ம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 15-ம் தேதியும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 5-ம் தேதியும் தொடங்கும் என்றும், M.E., M.Tech., MBA, MCA, M.Sc. முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 8-ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்