தமிழக செய்திகள்

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு உறுதிமொழி

கூடலூர் நகராட்சி சார்பில், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணி மண்டபத்தில் நடந்தது.

தினத்தந்தி

கூடலூர் நகராட்சி சார்பில், தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணி மண்டபத்தில் நடந்தது. இதற்கு நகராட்சி சுகாதார ஆய்வாளர் விவேக் தலைமை தாங்கினார். பென்னிகுவிக் மணிமண்டபத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குப்பை கழிவுகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

ஊர்வலத்தின்போது, எனது குப்பை எனது பொறுப்பு, திட்டம் மூலம் தூய்மை நகரங்களாக மாற்ற மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆறு, ஏரி, குளம் ஆகிய நீர் நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களை வலியுறுத்தினர். பின்னர் மணி மண்டபம் முன்பு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை