தமிழக செய்திகள்

கோர்ட்டு, பொன்மலை பணிமனையில் தூய்மைப்பணி

திருச்சி கோர்ட்டு, பொன்மலை பணிமனையில் தூய்மைப்பணி நடந்தது.

தினத்தந்தி

திருச்சி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த தூய்மைப்பணி நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாபு தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு, கோர்ட்டு வளாகத்தில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் காந்திஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஸ்வச்சதா பக்வாடா என்ற தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை பகுதியில் நேற்று முன்தினம் தூய்மை பணியும் மேற்கொள்ளப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்