தமிழக செய்திகள்

கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் -மீனவர்கள் கலந்துரையாடல்

கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் -மீனவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

வாய்மேடு அடுத்த பன்னாள் மீனவ கிராம பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் மற்றும் மீனவர்கள் இடையேயான கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேதாரண்யம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர், 'கடற்கரை பகுதியில் அந்நியர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மீன் பிடி தொழிலுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் செல்ல வேண்டும். 14 வயதுக்கு உட்பட்டவர்களை தொழிலுக்கு அழைத்துச்செல்ல கூடாது' என்றார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து