தமிழக செய்திகள்

ரூ.27 லட்சத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

தினத்தந்தி

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் லாலாபேட்டை, வாணியம்பாடி, சாணார்பட்டி, சென்னிமலை, தாராபுரம், வெள்ளியம்பாளையம் பகுதிகளை சேர்ந்த 102 விவசாயிகள் 823 மூட்டை தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

காங்கயம், முத்தூர், ஆர்.எஸ்.ஊத்துக்குளி, வெள்ளகோவில், ஈரோடு, மூலனூர், நஞ்சை ஊத்துக்குளி பகுதிகளைச் சேர்ந்த 10 வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். நல்ல தரமான தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.74.88 பைசாவிற்கும், 2-ம் தர தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.56.88 பைசாவுக்கும் ஏலம் எடுத்தனர். மொத்தம் ரூ.27 லட்சத்து 53 ஆயிரத்து 504-க்கு விற்பனை நடைபெற்றது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சி.மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து