தமிழக செய்திகள்

கொங்கணாபுரத்தில்ரூ.2¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை

தினத்தந்தி

எடப்பாடி

கொங்கணாபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு 2 ஆயிரத்து 815 கிலோ தேங்காய் பருப்புகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஆதார விலை திட்டத்தின் கீழ் 15 மூட்டை தேங்காய் பருப்பு ஒரு கிலோ ரூ.108.60-க்கு விற்பனையானது. மீதமுள்ள தேங்காய் பருப்பு தரத்திற்கு ஏற்றார் போல் விலை போனது. அதன்படி முதல் தர தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.82.70-க்கும், குறைந்தபட்சமாக ரூ.73.66-க்கும், 2-ம் தரம் அதிகபட்சமாக ரூ.71.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.45-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை