தமிழக செய்திகள்

கோவை: மதுபோதையில் வடமாநில இளைஞர்களை தாக்கி பணம், செல்போன்கள் பறிப்பு - 5 பேர் கைது

கோவையில் மதுபோதையில் வடமாநில இளைஞர்களை தாக்கி பணம், செல்போனை பறித்த 5 பேரை போலீசார் செய்தனர்.

தினத்தந்தி

கணபதி,

கோவை மாவட்டம் கணபதி அருகே சித்தாதோட்டத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டுவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில இளைஞர்கள் சத்யாந்திர சிங் (வயது27), மகேந்திரசிங்(25) ஆகிய 2 பேர் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி சென்றுள்ளனர்.

அப்போது கடை முன்பு மதுகுடித்துக் கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தாக்கியது. பின்னர், அவர்களிடம் இருந்த ரூ. 4 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது வடமாநில இளைஞர்களிடம் பணத்தை பறித்த விஜயகுமார்(எ)பிளாக்கி(வயது25), பிரவீன்குமார்(27),பால்விக்டர்(26), அருண்பிரசாத்(24), பிரவீன்(21) ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து