தமிழக செய்திகள்

கோவை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் எதிரொலி - சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் சோதனை

கோவை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

கோவையில் நடைபெற்ற பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களின் எதிரொலியாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் கடந்த 3 நாட்களாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நபர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் ஏறக்குறைய 9 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

கோவை வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அங்குள்ள போலீஸ் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தமிழக உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து