தமிழக செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.44 லட்சம் உண்டியல் வசூல்

திருத்தணி முருகன் கோவிலில் ரூ.44 லட்சம் உண்டியல் வசூலாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருத்தணி முருகன் கோவிலில் கடந்த மாதம் 31-ந் தேதி ஆடிப்பூர திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து காணிக்கை செலுத்திவிட்டு சென்றனர்.

பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் பணம் அறநிலையத்துறை ஆணையர் அனுமதியுடன் எண்ணப்பட்டது.

இதில், உண்டியல் காணிக்கை ரூ.44 லட்சத்து 74 ஆயிரம் வசூலானது. மேலும், தங்கம் 85 கிராம், வெள்ளி 3 ஆயிரத்து 389 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்