தமிழக செய்திகள்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ராகுல் நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினத்தந்தி

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 40 படுக்கைகள் கொண்ட கொரோனா நோய் சிகிச்சை பிரிவை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவை நேரில் பார்வையிட்டு நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார், பிறகு நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்திடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு ஆஸ்பத்திரி முதல்வர் நாராயணசாமி, டாக்டர்கள், நர்சுகள் உடன் இருந்தனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்