மானாமதுரை,
மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், சிறுகுடி கிராமத்தில் குடியரசு தினத்தையொட்டி கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.முன்னதாக சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவர் பஞ்சவர்ணம் அனைவரையும் வரவேற்றார். இதில் மானாமதுரை யூனியன் தலைவர் லதா அண்ணாதுரை, துணைத்தலைவர் முத்துச்சாமி ஐயர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட ஊரசு வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சிவராமன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார். ஆகியோர் கலந்து கொண்டனர்