தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி

கள்ளக்குறிச்சியில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் கிராமத்தின் ஒளி தொண்டு நிறுவனம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, கிராமத்தின் ஒளி நிர்வாக இயக்குனர் டாக்டர் சக்தி கிரி, இயக்குனர் மேகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியானது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு கச்சிராயப்பாளையம் சாலை, கடைவீதி வழியாக சென்று மந்தவெளியில் முடிவடைந்தது. இதில் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கிராமத்தின் ஒளி தொண்டு நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு