தமிழக செய்திகள்

பேராசிரியர்களை கல்லூரிக்கு வரச்சொல்லி நிர்ப்பந்திக்க கூடாது கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு

பேராசிரியர்களை கல்லூரிக்கு வரச்சொல்லி நிர்ப்பந்திக்க கூடாது கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு.

தினத்தந்தி

சென்னை,

கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சில கல்லூரிகளில் இணைய வழியாக வகுப்புகளை எடுக்க ஆசிரியர்களை கல்லூரிக்கு கண்டிப்பாக வரக் கூறுவதாகவும், தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (என்.ஏ.ஏ.சி.) சார்ந்த பணிகள் மற்றும் இதர கல்லூரி சார்ந்த பணிகளை கல்லூரிக்கு வந்து மேற்கொள்ளுமாறு நிர்ப்பந்திப்பதாகவும் புகார்கள் வருகின்றன.

இது கொரோனா தொடர்பான அரசாணையில் தெரிவித்துள்ள வழிமுறைகளை மீறுவதாகும். எனவே கொரோனா நோய்த்தொற்று அதிகரித்துவரும் தற்போதைய சூழ்நிலையில், கல்லூரி ஆசிரியர்களை எக்காரணத்தைக் கொண்டு கல்லூரிக்கு நேரில் வர நிர்ப்பந்தம் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்