தமிழக செய்திகள்

அஞ்சுகிராமம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

அஞ்சுகிராமம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

அஞ்சுகிராமம்,

அஞ்சுகிராமம் அருகே கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கல்லூரி மாணவர் தற்கொலை

அஞ்சுகிராமம் அருகே பால் குளத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன். இவருடைய மகன் ரோஷன் (வயது 18). இவர் ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ 2-வது ஆண்டு படித்து வந்தார். கடந்த 3 மாதமாக கல்லூரிக்கு சரி வர செல்லாமல் இருந்து வந்ததாகவும், அதை தந்தை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சமையல் அறையில் ரோஷன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து கலைச்செல்வன் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அஞ்சுகிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கு காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்