கடலூரில் அரசுப் பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த கல்லூரி மாணவி ரத்த காயங்களுடன் படு காயமடைந்தார்
இந்நிலையில் பேருந்தை நிறுத்துவது போல் சென்று, திடீரென எடுத்ததால் கீழே விழுந்து விட்டதாக மாணவி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காயமடைந்த மாணவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.