தமிழக செய்திகள்

நண்பர்கள் இடையே மோதல்; 3 பேர் படுகாயம்

நண்பர்கள் இடையே மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

கூத்தாநல்லூர் அருகே உள்ள வெள்ளக்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது25), ராமன் (23), லட்சுமணன் (20), சுபாஷ் (25), டேவிட் (24). இவர்கள் 5 பேரும் நண்பர்கள். இந்த நிலையில் 5 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் சுபாஷ், டேவிட் ஆகிய 2 பேரும் சேர்ந்து மணிகண்டன், ராமன், லட்சுமணன் ஆகிய 3 பேரையும் கத்தியால் குத்தியதில், 3 பேரும் படுகாயம் அடைந்து, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கூத்தாநல்லூர் போலீசில் மணிகண்டன் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுபாஷ் மற்றும் டேவிட்டை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து