தமிழக செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் உயிரிழந்தார்.

தினத்தந்தி

முசிறி:

தொட்டியம் எடத்தெருவை சேர்ந்தவர் வேலு(வயது 40). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஓமந்தூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு புலிவலம் தண்டலைப்புத்தூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது வடக்கு நல்லியம்பட்டியை சேர்ந்த பொன்னையா (49) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், வேலுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வேலு நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த வேலுவின் மனைவி கனிமொழி, முசிறி போலீசில் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை