தமிழக செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம் - நாளை முதல்-அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது அமைச்சர்கள் குழு

வடகிழக்கு பருவமழையினால் டெல்டா மாவட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. குறிப்பாக தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்தது. தொடர்மழையால் டெல்டா மாவட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையினால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதங்கள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர்கள் குழு நாளை சமர்ப்பிக்கிறது.

இது தொடர்பாக ஏற்கெனவே, வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு அவர்கள் முதல்நிலை ஆய்வினை மேற்கொண்ட நிலையில், கடந்த இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில், சேகரிக்கப்பட்ட விவரங்கள் நாளை சமர்ப்பிக்கப்படுகிறது.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி