தமிழக செய்திகள்

கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராணி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

தினத்தந்தி

தஞ்சை ஆற்றுப்பாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மாநகர செயலாளர் வடிவேலன் மற்றும் நிர்வாகிகள் குருசாமி, கரிகாலன், அப்துல்நசீர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், ராணி வாய்க்கால் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும். ரேசன் கடையை அருகில் இடமாற்றம் செய்து பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலகத்தை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் மாற்ற செய்ய வேண்டும். சுத்தமான குடிநீர் வசதி செய்து தர வேண்டும். கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு