தமிழக செய்திகள்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

கோவில்பட்டி:

கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு நகரச் செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார்.

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்று போன்ற பல்வேறு சான்றுகள் வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதை தடுக்க வேண்டும். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில்பட்டி தாலுகாவில் உள்ள தகுதியான ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, அதனை கிராம கணக்கில் பதிவு செய்ய வேண்டும். கோவில்பட்டி பிரதான சாலையில் இலவச சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும். அரசு மருத்துவமனையில் பெண்களுக்கள் சுகாதார வளாகத்துக்கு கதவுகள் பொருத்த வேண்டும். நீதிமன்ற வளாகத்தில் பூட்டி கிடக்கும் கழிப்பிடத்தை திறக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு