தமிழக செய்திகள்

மதுவிற்பதாக கலெக்டருக்கு புகார்: பெட்டிக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்'

மதுவிற்பதாக கலெக்டருக்கு புகார் வந்ததால் பெட்டிக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு கிராமம் மேட்டு தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 38). இவர் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் மது விற்பதாக மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து அந்த கடைக்கு 'சீல்' வைக்க கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை, நகராட்சி ஆணையர் மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் செல்ல கணேஷ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பெட்டிக்கடைக்கு சீல் வைத்தனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்