தமிழக செய்திகள்

கட்டாய ஓய்வு கண்டித்து: நாடு முழுவதும் 15-ந்தேதி தர்ணா போராட்டம் - மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவிப்பு

கட்டாய ஓய்வு அளிக்கும் நடவடிக்கை உள்ளிட்ட மத்திய அரசின் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் 33 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்து இருக்கிறது.

சென்னை,

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து நடைபெற உள்ள போராட்டம், வேலைநிறுத்தம் தொடர்பான ஆயத்தக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கணக்கு அதிகாரி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-