தமிழக செய்திகள்

லாரியில் கடத்த முயன்ற22 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 22 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, செந்தில்முருகன் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி கூட் ரோடு அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 50 கிலோ கொண்ட 440 மூட்டைகளில் 22 டன் ரேஷன் அரிசி இருந்தது. இதுகுறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திருப்பத்தூரில் இருந்து கர்நாடக மாநிலம் பங்கார்பேட்டைக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரிந்தது. திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அக்ரஹாரத்தை சேர்ந்த வசந்த், சிவா ஆகியோரது அரிசி ஆலையில் இருந்து ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

டிரைவர் கைது

இதையடுத்து லாரி டிரைவர் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியை சேர்ந்த ரபீக் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசி ஆலை உரிமையாளர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்