தமிழக செய்திகள்

பெங்களூருவில் இருந்து மதுரைக்கு காரில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக மதுரைக்கு காரில் கடத்த முயன்ற ரூ.96 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

ஓசூர்

வாகன சோதனை

ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் ரூ.96 ஆயிரம் மதிப்பிலான 214 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது. இதுகுறித்து கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மதுரை முருகன்பத்திரி, நியூ ஜெயில் ரோட்டை சேர்ந்த மனோஜ்குமார் (29) என்பது தெரியவந்தது.

டிரைவர் கைது

இவர் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு குட்காவை கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கார் மற்றும் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தல் தொடர்பாக தொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை