தமிழக செய்திகள்

கணவன்- மனைவி பிரச்சினையில் சமரசம் பேச வந்த போது மோதல்

கிருஷ்ணகிரி போலீஸ் நிலையத்துக்கு கணவன்- மனைவி பிரச்சினையில் சமரசம் பேச வந்த போது மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினலும் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி:-

கிருஷ்ணகிரி போலீஸ் நிலையத்துக்கு கணவன்- மனைவி பிரச்சினையில் சமரசம் பேச வந்த போது மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினலும் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கணவன்- மனைவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கே.எட்டிப்பட்டி அருகே எட்டிப்பட்டியை சேர்ந்தவர் அன்பு (வயது 30). இவருடைய சகோதரி மகாலட்சுமி. இவருக்கும் கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி அருகே மேல்புதூரை சேர்ந்த வினோத்குமார் (30) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மகாலட்சுமி பெற்றேர் வீட்டிற்கு வந்து விட்டார். இதற்கிடையே மகாலட்சுமி தரப்பினரும், வினோத்குமார் தரப்பினரும் விசாரணைக்காக கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.

8 பேர் மீது வழக்கு

அந்த நேரம் ஏற்பட்ட பிரச்சினையில் அன்புவை, வினோத்குமார் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. அதுகுறித்து அன்பு கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வினோத்குமார், சண்முகம் (60) உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல சண்முகம் தான் தாக்கப்பட்டதாக ஒரு புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், மகாலட்சுமி, அன்பு (30) உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து