தமிழக செய்திகள்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆரணியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

ஆரணி

ராகுல்காந்தி மீது 2 ஆண்டு சிறை தண்டனை எதிரொலியாக எம்.பி. பதவியை பறித்து நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசை கண்டித்து ஆரணி மணிக்கூண்டு அருகில் நகரசபை உறுப்பினர் டி.ஜெயவேலு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் யூ.அருணகிரி, ஏ.ஆர்.அசோக்குமார், ராமலிங்கம், மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எஸ்.வாசுதேவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஏ.பழனி, எஸ்.சி., எஸ்டி. மாவட்ட தலைவர் என்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் எஸ்.பிரசாந்த் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தெள்ளூர் சேகர், இளங்கோவன், சரவணன், சோலை முருகன், ஆசைத்தம்பி, மணிவேல், முருகன், ஏழுமலை, கண்ணப்பன், சிவபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்