தமிழக செய்திகள்

கூட்டேரிப்பட்டில் காங்கிரசார் மறியல்

கூட்டேரிப்பட்டில் காங்கிரசார் மறியலில் ஈடுபட்டனா.

அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரது எம்.பி. பதவியையும் நாடாளுமன்ற செயலகம் பறித்தது. இதை கண்டித்து கூட்டேரிப்பட்டில் மறியலில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், வட்டார தலைவர் மெடிக்கல் செல்வம் உள்பட 47 பேரை மயிலம் போலீசார் கைது செய்தனர்.