தமிழக செய்திகள்

பெரியகுளத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரியகுளத்தில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் பெரியகுளம் வடகரை உழவர் சந்தை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், அதை தடுக்க தவறியதாக மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பெண்கள் குழுவின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ராதேவி தலைமை தாங்கினார். இதில், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஸ்வரி, சர்வோதீப் அமைப்பின் இயக்குனர் சகாய சங்கீதா, பெரியகுளம் நகர் நலச்சங்க செயலாளர் அன்புக்கரசன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு, மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்