தமிழக செய்திகள்

கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

நெல்லை வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டுமான வாரிய கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தீபாவளி பண்டிகை கால போனஸ் ரூ.5 ஆயிரத்தை ஒரு மாதத்திற்கு முன்பாக வழங்க வேண்டும். புதுப்பித்தல் ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் விண்ணப்பிக்க தொழிற்சங்க நிர்வாகிகள் ஒப்புதல் அளிக்கும் வகையில் வழிவகை செய்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் நலச்சங்க செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஜான் பாஸ்கர், சங்கர், ஜெயபால், சங்கரநாராயணன், முருகேசன், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. நெல்லை மாவட்ட செயலாளர் முருகன், மாநில குழு மோகன், செண்பகம், நெல்லை மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் நல சங்க பொருளாளர் முருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் கட்டுமான தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை