தமிழக செய்திகள்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு, பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் குறித்து விசாரணை நடத்த நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டிக்கு உத்தரவிட்டார்.

அதன்பின்னர் ஆதார் எண்ணை மின்இணைப்பு எண்ணுடன் இணைப்பது குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். நேற்று காலை நிலவரப்பட்டி நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் உள்ள 2 லட்சத்து 11 ஆயிரத்து 314 மின் இணைப்பு எண்களுடன் 1 லட்சத்து 63 ஆயிரத்து 474 பேர் தங்கள் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். இது 77.34 சதவீதம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்