தமிழக செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்பாக, பதில் அளிக்க சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்பாக, பதில் அளிக்க சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை செயல்படுத்தவில்லை என தெரிவித்து ஊழலுக்கு எதிரான இயக்கம் சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக பதில் அளிக்க, சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்