தமிழக செய்திகள்

தென்மாவட்டத்தில் தொடர் கனமழை: மீட்பு பணியில் கடலோர காவல்படை

இந்திய கடலோர காவல்படை மூலம் 6 பேரிடர் மீட்பு குழுக்கள், மீட்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தினத்தந்தி

சென்னை,

தென் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் இந்திய கடலோர காவல்படை ஈடுபட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்து போன்ற நிவாரண பொருட்களை வழங்கவும் இந்திய கடலோர காவல்படையின் உதவியை தமிழ்நாடு அரசு கோரி உள்ளது.

இதையடுத்து இந்திய கடலோர காவல்படை மூலம் 6 பேரிடர் மீட்பு குழுக்கள், மீட்பு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி கடல் மற்றும் கடலோர பகுதிகளை கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் மற்றும் ரோந்து கப்பல் கண்காணித்து வருகிறது. துடுப்பு படகுகள், விசைப்படகுகள் கொண்ட மீட்பு நீர் மூழ்கி குழுவும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி வசவப்பபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இந்திய ராணுவம் மீட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்