திண்டுக்கல்,
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 1-ந் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், ஒரு சில பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கொடைக்கானலில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட நபர்கள் பள்ளி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.