தமிழக செய்திகள்

கொரோனா அச்சம்; கோயம்பேட்டில் கரும்பு விற்பனை குறைவு - விலை வீழ்ச்சி

கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வராததால் கரும்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தைக்கு 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் செங்கரும்பு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வராததால் கரும்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு கட்டு கரும்பு 400 ரூபாய் வரை விற்பனையானதாகவும், தற்போது 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் லாரி ஒன்றுக்கு 2,500 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதும் தங்களை பாதிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்