தமிழக செய்திகள்

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

தஞ்சை கோட்ட தபால் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.

தினத்தந்தி

தஞ்சாவூர், 

தஞ்சை துணை சுகாதார அலுவலகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தஞ்சை கோட்ட தபால் அலுவலகத்துடன் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தஞ்சை கோட்ட தபால் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமை தஞ்சை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மானம்புசாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சாந்தி தடுப்பூசி செலுத்தினார். தஞ்சை கோட்ட தபால் அலுவலக உதவி கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த், உமாபதி, மக்கள் தொடர்பு அதிகாரி நீலவண்ணன் யாதவ் உள்பட தஞ்சை கோட்ட தபால் அலுவலக ஊழியர்கள், நகர்ப்புற துணை தபால் ஊழியர்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள், ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் உள்பட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை