சென்னை,
நல வாரியத்தில் பதிவு செய்யாத 3ஆம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடும்ப அட்டை இல்லாத 3ஆம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
மேலும், அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது எனக்கூறிய தலைமை நீதிபதி "உண்மையான மூன்றாம் பாலினத்தவர்களின் பெயர், முகவரியை அளிக்க வேண்டும்" என மனுதாரர் கிரேஸ் பானுவுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.