தமிழக செய்திகள்

கரூரில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் - அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று திறந்து வைத்தார்.

தினத்தந்தி

கரூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அங்குள்ள தனியார் பள்ளியில் 100 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனா சிகிச்சைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சிகிச்சை மையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். மேலும், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தனியார் அமைப்பு மூலம் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்