தமிழக செய்திகள்

தமிழகத்தில் கொரோனா விதிமீறல் அபராதமாக இதுவரை ரூ.67.17 கோடி வசூல் - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.67.17 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் முழுவதும் கொரோனா விதிகளை மீறும் கடைகள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மீது பொதுசுகாதாரத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முககவசம் அணியாதவர்கள், சமூக விலகலைகட்டிப்பிடிக்காதவர்கள் உள்ளிட்டோர் மீது காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அபராதம் வசூலித்து வருகின்றன.

அந்த வகையில் கொரோனா 2-வது அலையில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக 37 லட்சத்து 71 ஆயிரம் பேரிடம் இருந்து இதுவரை 67 கோடியே 17 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே சமயம் கொரோனா முதல் அலையின் போது கொரோனா விதிகளை மீறியதாக 22 லட்சத்து 99 ஆயிரம் நபர்களிடம் இருந்து 52 கோடியே 78 லட்சம் ரூபாய் அபராதம் வசூலானது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு