தமிழக செய்திகள்

ரேஷன்கடை பணியாளர்கள் நேர்முக தேர்வில் மாற்றுத்திறனாளி வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம்

ரேஷன்கடை பணியாளர்கள் நேர்முக தேர்வில் மாற்றுத்திறனாளி வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யலாம் என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான சங்கங்களில் 181 விற்பனையாளர் மற்றும் 19 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதிப்பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 15-ந் தேதி நேர்முகத்தேர்வு நடைபெறுவதையொட்டி மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. அரசு உதவி மருத்துவர் நிலைக்கு குறையாத மருத்துவரிடம் உடற்தகுதி சான்றிதழை பெற்று சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும்போது சமர்பிக்க வேண்டும். தங்களது உரிமை கோரலுக்கு ஆதாரமாக தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம், தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும். எனவே மேற்பட்ட திருத்தப்பட்ட நெறிமுறைப்படி ஏதேனும் ஒரு சான்றிதழுடன் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வில் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை