தமிழக செய்திகள்

தொடர் மழைக்கு குடிசை சேதம்

தொடர் மழைக்கு குடிசை சேதம் ஆனது.

தினத்தந்தி

குளித்தலை பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை சிறிது நேரம் மழை பெய்தது. பின்னர் சிறிது நேரம் வெயில் அடித்தது. இதன் பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த தொடர் மழையின் காரணமாக குளித்தலை அருகே உள்ள எழுநூற்றுமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது குடிசை வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இது குறித்த தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டு அரசு சார்பில் அவருக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகை கொடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை