தமிழக செய்திகள்

மீனம்பாக்கம் ரெயில் நிலைய தரைத்தளத்தில் பயணச்சீட்டு கவுண்ட்டர் அமைக்க கோரி வழக்கு - ஐகோர்ட்டு நோட்டீஸ்

மீனம்பாக்கம் ரெயில் நிலைய தரைத்தளத்தில் பயணச்சீட்டு கவுண்ட்டர் அமைக்க கோரி வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

தினத்தந்தி

சென்னை ஐகோர்ட்டில் ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ''சென்னை மீனம்பாக்கம் ரெயில் நிலையத்தில், முதல் மாடியில் உள்ள கவுண்ட்டரில்தான் பயணச்சீட்டு பெற வேண்டியுள்ளது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் முதல் மாடிக்கு சென்று பயணச்சீட்டு வாங்குவதில் பெரும் சிரமம் உள்ளது. எனவே, தரைத்தளத்தில் பயணச்சீட்டு கவுண்ட்டர் அமைக்க தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்