தமிழக செய்திகள்

காரை சரியாக சர்வீஸ் செய்யாததால் மன உளைச்சல் - இழப்பீடு வழங்க தனியார் கார் நிறுவனத்திற்கு கோர்ட்டு உத்தரவு

காரை சரியாக சர்வீஸ் செய்யாமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக, வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்குமாறு, தனியார் கார் சேவை நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

மதுரை,

காரை சரியாக சர்வீஸ் செய்யாமல் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக, வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்குமாறு, தனியார் கார் சேவை நிறுவனத்திற்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த முருகப்பன் என்பவர், சிவகங்கை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தனியார் கார் ஷோரூமில் 40 லட்ச ரூபாய்க்கு வாங்கிய காரில், டேஷ் போர்டில் அடிக்கடி சத்தம் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் பலமுறை வலியுறுத்தியும் சரியாக சர்வீஸ் செய்யவில்லை என்றும், தொடர்ந்து சத்தம் எழுந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தனியார் கார் நிறுவனம் 16 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார். இதனை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு, வாடிக்கையாளருக்கு கார் நிறுவனமும், விற்பனை ஷோரூம் நிறுவனமும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ 7 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து