தமிழக செய்திகள்

நரிக்குறவ மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டி

நரிக்குறவ மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

தினத்தந்தி

நரிக்குறவர் சமுதாய மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை ஊராட்சிக்குட்பட்ட மலையப்ப நகரில் நடந்தது. இந்த போட்டியில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதையடுத்து, போட்டியில் முதலிடத்தை பிடித்த கள்ளக்குறிச்சி மாவட்டம், மாடம்பூண்டி அணிக்கு ரூ.10 ஆயிரமும், 2-ம் இடத்தை பிடித்த பெரம்பலூர் மாவட்டம், எறையூர் அணிக்கு ரூ.5 ஆயிரமும், 3-ம் இடத்தை பிடித்த கோவை மாவட்டம், காரமடை அணிக்கு ரூ.2 ஆயிரத்து 500-ம் மற்றும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன. மேலும் போட்டியில் அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கும் பரிசு தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டன.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை