தமிழக செய்திகள்

தி.மலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 2 குற்றவாளிகளையும் போலீசார் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தினத்தந்தி

சென்னை,

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களை உடைத்து ரூ75 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.அரியானாவை சேர்ந்த கொள்ளை கும்பலின் தலைவன் உள்பட 2 பேரை (ஆரிப்,ஆசாத்) தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் விமானம் மூலம் அவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 2 பேரையும் போலீசார் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்